M.R.V.Creations

திருமூலர் திருமந்திரம்


Login     New User Signup


Sloka Vice - Explanation:

THIRUMOOLAR THIRUMANDHIRAM - திருமூலர் திருமந்திரம்



Shivamayam Thiruchitrrambalan - சிவமயம் திருச்சிற்றம்பலம்


Om Namah Shivaya - ஓம் நமஹ் ஷிவாய​

இரண்டாம் த​ந்திரம் - தக்கன் வேள்வி


।। திருமூலர் திருமந்திரம் - இரண்டாம் த​ந்திரம் - 4. தக்கன் வேள்வி - பாடல் 8 ( திருமந்திரத்தில் பாடல் 360) ।।

360
நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
வில்லாற் புரத்தை விளங்கெரி கோத்தவன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே. 8

Transliteration - English


।। Thirumoolar Thirumandhiram - Irandaam Thandhiram - 4. Dhakkan Velvi - Song 8 ( Song 360 in Thirumandhiram ) ।।

360
Nallaar navagundam onbadhum inburap
Pallaar amarar parindharul seigena
Villaar puraththai vilanggeri koththavan
Pollaa asurargal pondrum padikke. 8

மொழிபெயர்ப்பு


।। திருமூலர் திருமந்திரம் - இரண்டாம் த​ந்திரம் - 4. தக்கன் வேள்வி - பாடல் 8 ( திருமந்திரத்தில் பாடல் 360 )- பொருள் ।।

இறைவனின் அருள் வேண்டி வேள்விகள் அமைத்து தம்மை வணங்கும் நல்லவர்கள் அனைவரும் அனைத்துவித நலன்களும் பெற்று வாழ தயைகூர்ந்து அருள் புரியுமாறு பலகோடி தேவர்கள் அனைவரும் இறைவனை வேண்டிக்கொள்ள யாராலும் அழிக்க முடியாத அசுரர்களையும் அவர்களின் முப்புரங்களையும் வில்லேந்தி அம்புகொண்டு எரித்த எம்பெருமானும் கருணைகொண்டு உயிர்களை வாட்டும் பல கொடிய அசுரர்களையும் அழிக்கும் வலிமையை அவர்களுக்கு வழங்கி அருளினான்.


Translation


।। Thirumoolar Thirumandhiram - Irandaam Thandhiram - 4. Dhakkan Velvi - Song 8 ( Song 360 in Thirumandhiram ) - Meaning ।।

" All the DemiGods in crores requested for the grace of Lord Shiva and began several sacrificial fires so that all those living beings who are good and pray them are bestowed with all goodness in their life. They pleaded with Lord Shiva to bless them and Lord Shiva, who killed all those demons and burnt their three worlds with his bow and arrow, bestowed His grace and gave the DemiGods the power to destroy all those evil demons who trouble living beings. "


।। திருமூலர் திருமந்திரம் - இரண்டாம் த​ந்திரம் - 4. தக்கன் வேள்வி - பாடல் 8 ( திருமந்திரத்தில் பாடல் 360 )- உட்கருத்து ।।

உயிர்கள் எந்த செயலைச் செய்தாலும், மனம், வாக்கு, உடம்பு ஆகிய மூன்றும் ஒன்றாக வைத்து இறைவனை மட்டுமே நினைத்து அவனது திருவருளை கொடுக்குமாறு வேண்டிக்கொண்டு இறை அருள் பெற்று செய்தால் எத்தகைய வேலையையும் செய்யத்தடையாக இருப்பவற்றை அழிக்கும் சக்தியை இறைவன் உயிர்களுக்கு அருளுவான்.


।। Thirumoolar Thirumandhiram - Irandaam Thandhiram - 4. Dhakkan Velvi - Song 8 ( Song 360 in Thirumandhiram ) - Inner Meaning ।।

" Human beings in all their activities should show their united effort where the mind, speech and body act in unison and keeping their concentration only on God while praying for His grace and when done so He bestows them grace that will enable them to win over any obstacles that come in their way while performing the action."


திருச்சிற்றம்பலம் - எல்லாம் சிவமயம்



Thiruchitrrambalam - Ellaam Shivamayam



ஓம் நமஹ் ஷிவாய!!



Om Namah Shivaya!!